Jun 26, 2014

திருச்செங்கோட்டில் சோதனை 60 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல் அதிகாரிகள் அதிரடி


திருச்செங்கோடு, ஜூன் 26:
திருச்செங்கோட்டில் நடத்திடிய சோதனையில் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
திருச்செங்கோடு புதிய பஸ் நிலைய பகுதியில் நேற்று உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். மாவட்ட நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செந்தில் பாலமுருகன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் 50க்கும் மேற்பட்டோர் கடை கடையாக சென்று ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தடை சய்யப்பட்ட புகையிலை, பான்பராக், ஹான்ஸ் மற்றும் காலாவதியான பானங்கள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் 60 ஆயிரம் இருக்கும். இம்மாதிரியான சோதனைகள் அடிக்கடி நடைபெறும். இதில், தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

No comments:

Post a Comment