Jun 18, 2014

120 கிலோ புகையிலை பறிமுதல்

அண்ணாநகர், ஜூன் 18:
கோயம்பேடு, அரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் லட்சுமி நாராயணன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், கோயம்பேடு காளியம்மன் கோயில் ரோடு, 100 அடி சாலை, அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ காலனி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது, கடைகள் மற்றும் குடோன்களில் பதுக்கி வைத்திருந்த 120 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை கொடுங்கையூரில் உள்ள குப்பை கொட்டும் வளாகத்தில் பள்ளம் தோண்டி அழித்தனர்.

No comments:

Post a Comment