Jan 12, 2014

உணவு பாதுகாப்பு துறை அறிவிப்பு கடைகளை பிப்.4க்குள் பதிவு செய்வது கட்டாயம்

சிவகங்கை, ஜன. 12: 
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கடைகள் அனைத்தையும்வரும் பிப். 4க்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தி உள்ளது. 
அதன்படி மளிகை கடை, பெட்டிக்கடை, டீக்கடை, சிற்றுண்டி நிலையம், தெருவோர கடைகள், தள்ளுவண்டி, ஓட்டல்கள், உணவு பொருள் சேமித்து வைப்பவர்கள், மொத்த வியாபாரிகள் பதிவு செய்ய வேண்டும். மேலும் சமையல் செட் வைத்திருப்பவர்கள், கோவில் மற்றும் பொது இடங்களில் அன்னதானம் வழங்குபவர்கள், ரேஷன் கடைகள், சத்துணவு கூடங்கள், அங்கன் வாடி, பழம் மற்றும் காய்கறி வியாபாரிகள் உட்பட அனைவரும் உணவு பாதுகாப்பு சட்டம் 2006ன்படி தங்களது வணிகத்தை பதிவு மற்றும் உரிமம் பெருவது கட்டாயமாகும். 
பதிவு, உரிமம் பெறுபவர்கள் உணவு பாதுகாப்பு துறையின் www.fssai.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து ரேசன் கார்டு, வங்கியில் ரூ.100 செலுத்தியதற்கான உண்மை நகல், பாஸ்போர்ட்சைஸ் போட்டோ, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, தொழில் உள்ளிட்ட விரங்களுடன் விண்ணப்பத்தை மாவட்ட நியமன அலுவலர் அல்லது வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்களிடம் வழங்க வேண்டும். ஏற்கனவே பதிவு, உரிமம் பெற்றவர்கள் மீண்டும் புதுப்பிக்க வேண்டும். இதற்கான காலக்கெடு பிப்.4 ஆகும். 
காலக்கெடு நீட்டிப்பு இல்லை எனவும் தவறுபவர்கள் அபராத தொகையுடன் விண்ணப்பிக்க நேரிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 04575&243725 என்ற தொபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment