Nov 1, 2013

தீபாவளியை யொட்டி பலகாரம் விற்பனை செய்பவர்கள் உரிமம் பெற வேண்டும்-கலெக்டர் எச்சரிக்கை

தூத்துக்குடி, நவ.1:
தீபாவளி யை யொட்டி பலகாரங்கள் விற்பனை செய்பவர்கள் உணவு பாதுகாப்புத் துறை யில் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும் என்று கலெக்டர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு மற்றும் கார பண்டங்களுக்கு சீட்டு நடத்துபவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர் கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு வினியோகம் செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
இனிப்பு மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர் கள் தரமான மூலப்பொருட் களை கொண்டு சுகாதார மான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவு பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்கக் கூடாது. பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு விவரச்சீட்டு அச்சிடும் போது, அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதியாகும் காலம், சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியவை அவசியம் குறிப்பிட வேண்டும். உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.
பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக உணவு பாதுகாப்பு அலுவலத்தை தொடர்பு கொண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006ன் கீழ் தங்கள் வணிகத்தை பதிவு செய்து உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
பொதுமக்கள் உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் இருந்து மட்டும் பலகாரங்கள் வாங்குமாறும், பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களில் விவரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி உபயோகிக்கலாம். இது தொடர்பான புகார்கள் ஏதும் இருந்தால் தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலருக்கு தகவல் தெரிவிக்கலாம்.  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment