Jan 6, 2019

விக்கிரவாண்டியில் பிளாஸ்டிக் பறிமுதல்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி பேரூராட்சி சார்பில் கடைவீதியில் அதிகாரிகள் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.தமிழக அரசு, கடந்த 1ம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. அதனையொட்டி விக்கிரவாண்டி பகுதியில் உள்ள கடைகளில், பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றியரசு தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் இளங்கோவன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து, தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

No comments:

Post a Comment