Jul 2, 2017

குடோனுக்கு சீல் வைப்பு

தேனி;தேனியில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சுகுணா, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாண்டியராஜன், மோகன்தாஸ், சுரேஷ்கண்ணன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் தடை செய்யப்பட்ட பாக்கு உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை குறித்து கடைகளில் ஆய்வு செய்தனர். கடற்கரை நாடார் தெருவில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. ஒரு லட்சம் மதிப்புள்ள 900 கிலோ புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment