Apr 21, 2017

காலாவதியான உணவு பொருள் குளிர்பானங்கள் அதிரடி பறிமுதல்

விழுப்புரம்: விழுப்புரத்தில் காலாவதியான உணவு பொருட்கள் மற்றும் குளிர்பானங்களை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் பழைய பஸ் நிலையம் மற்றும் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் வரலட்சுமி தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இப்பணியில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கரலிங்கம், ரவிக்குமார், சமரேசன், முருகன், ஜெயராஜ் மற்றும் கதிரவன் ஆகியோர் ஈடுபட்டனர்.
ஆய்வில், காலாவதியான 25 கிலோ உணவு பொருட்கள், 70 பாட்டில் குளிர்பானங்கள், 10 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் 5 கிலோ கலப்பட டீ துாள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து காலாவதியான பொருட்களை, அழித்தனர்.

No comments:

Post a Comment