Jun 11, 2015

மாட்டிறைச்சி கடைகளுக்கு "சீல்"


கிருஷ்ணகிரி, ஜூன் 11:
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ராஜேஷ் உத்தரவின்படி, உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கலைவாணி மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் துளசிராமன், சுவாமிநாதன், ராஜசேகர், சேகர், லிங்கவேல், ஸ்டாலின் மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் நேற்று கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியில் உள்ள மாட்டிறைச்சி கடைகளில் திடீரென ஆய்வு செய்தனர்.
இதில், 2 கடைகளில் மாட்டிறைச்சி சரியாக சுத்தம் செய்யப்படாமல் ஈக்கள் மொய்த்து கொண்டிருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அந்த கடைகளில் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்பிலான மாட்டிறைச்சியினை பறிமுதல் செய்து, சீல் வைத்தனர்.
கிருஷ் ண கிரி யில் சுகா தா ர மற்ற முறை யில் மாட்டி றைச்சி விற் பனை செய்த கடை களுக்கு சீல் வைத் த னர்.

No comments:

Post a Comment