Apr 7, 2015

உலக சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி



சேலம், ஏப்.7&
உலக சுகாதார தினத்தையொட்டி தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை சார்வில் இன்று சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் மகரபூஷணம், டிஆர்ஓ செல்வராஜ், மாநகராட்சி கமிஷனர் செல்வராஜ், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் அனுராதா உட்பட பலர் கலந்துகொண்டு விழிப்புணர்வு கண் காட்சி அரங்கை திறந்துவைத்தனர்.
அரங்கில், உடலுக்கேற்ற நல்ல உணவு முறைகள், கெட்ட உணவுகள் மற்றும் அதன் விளக்கங்கள் பற்றி விவரிக்கப்பட்டிருந்தது. விழிப்புணர்வின் போது பொதுமக்களுக்கு மூலிகை குளிர்பானம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment