Jan 14, 2015

வெல்ல ஆலையில் அதிகாரிகள் சோதனை

தர்மபுரி, ஜன.14:
தர்மபுரி அருகே வெல்லம் ஆலையில் உணவு பாது காப்பு அதிகாரி அதிரடி சோதனை நடத்தினார். பரிசோதனைக்கு வெல்ல மாதிரி சேகரிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ரசாயனம் கலந்திருந்தால் ஆலைக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப் பட்டது.
தர்மபுரி அருகே முத்துக்கவுண்டன் கொட்டாய் பகுதியில் இயங்கும் கரும்பு வெல்ல ஆலையில் வெல்லத்தில் ரசாயனப் பொரு ட்கள் கலப்பதாக புகார் வந்தது. கலெக்டர் உத்தர வின் பேரில், நேற்று உணவு பாதுகாப்பு நியமன அதி காரி தினேஷ் தலைமையில் அதிகாரிகள் திடீரென சோ தனை நடத்தினர். இதில் பீமன் என்பவருடைய வெல்ல ஆலையில் அதிரடி சோதனை நடத்தினர்.
இச்சோதனையில் பிளீ ச்சிங் பவுடர், ஹைட்ரஜன் பெராக்சைடு, ஹைட்ரஜன் சல்பேட், சோடா உப்பு உள் ளிட்ட ரசாயன பொருட்கள் வெல்லத்தில் கலப்பதாக சந்தேகம் அடைந்த அதிகாரிகள் மாதிரி எடுத்து அனுப்பியுள்ளனர்.
பரிசோதனை யில் ரசாயன பொருட்கள் கலந்திருப்பது உறுதியா னால், ஆலை சீல் வைக்கப் படும் என மாவட்ட நியமன அதிகாரி தினேஷ் கூறினார்.

1 comment:

  1. ஆய்வுகள் தொடரட்டும்

    ReplyDelete