Jan 15, 2015

சங்ககிரி கடைகளில் திடீர் ஆய்வு

சேலம் மாவட்டம், சங்ககிரி பழைய பேருந்து நிலையப் பகுதியில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டி.அனுராதா புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டி.அனுராதா தலைமையிலான அலுவலர்கள் சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பேக்கரிக் கடைகள், ஹோட்டல்கள், தேநீர், குளிர்பானக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, காலாவதியான குளிர்பானங்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும், ஹோட்டல்களில் சோம்பு, சர்க்கரை, கடுகு உள்ளிட்டப் பொருள்களில் ரசாயனக் கலவைப் பூச்சு உள்ளதைக் கண்டறிந்து கலப்படமற்ற பொருள்களை பயன்படுத்துமாறு அதன் உரிமையாளர்களிடம் அறிவுறுத்தினார். இந்த ஆய்வினால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment