Nov 25, 2014

திரையரங்கு கேன்டீன்களில் காலாவதி தின்பண்டங்கள் பறிமுதல்

கடலூர், நவ. 25:
கடலூர் பகுதி திரையரங்குகளில் உள்ள கேன்டீன்களில் விற்பனை செய்யப்படுகின்ற தின்பண்டங்கள் தரமானதாக இல்லை என்ற புகார்களின் பேரில் நேற்று கடலூர் தந்தை பெரியார் சிலை அருகே உள்ள பிரபல திரையரங்கத்திற்குள் உள்ள கேண்டீனில் உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ராஜா தலை மையில் அலுவலர்கள் நந்தகுமார், சுப்ரமணியன், மாரிமுத்து, கொளஞ்சியான் ஆகியோர் சோதனையிட்டனர்.
இதில் கடையில் விற்கப்பட்ட 100 பாக்கெட் கான்பார்ப், 100 மிராண்டா பட்டில்கள், வெங்காய வத்தல்கள் 200 கி.லோ என ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தின்பண்டங்கள் மற்றும் குளிர்பதனங்கள் காலவாதியானவை என கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் கேன்டீன் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். இதுபோல் மீண்டும் நடந்தால் திரையரங்கிற்கு சீல் வைக்க நேரிடும் என உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா தெரிவித்தார். மாவட்டம் முழுவதும் உள்ள திரையரங்கங்களில் இதுபோல் அதிரடி சோதனைகள் நடத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment