Oct 21, 2014

தீபாவளி விற்பனைக்காக செய்த தரமற்ற இனிப்பு, பலகாரங்கள் பறிமுதல்


கடலூர், அக். 21:
கடலூர் மாவட்டத்தில், சுகாதாரமற்ற முறையில் தயார் செய்யப்பட்ட இனிப்பு பலாகாரங்களை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு முக்கிய அம்சமாக அமைந்துள்ள இனிப்பு மற்றும் பிற பலகார வகைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விற்பனை செய்யப்படும் பலகாரங்கள், இனிப்பு வகைகள் தரமானதாக இல்லையென தொடர் புகார் வந்தது. அதன்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா தலைமையில் மாவட்டம் முழுவதும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் இனிப்பு வகைகள் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் எண்ணெய் மற்றும் பொருட்கள் பயன்பாடு, தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சுகாதாரமற்ற முறையில் தயார் செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு 125 கிலோ இனிப்பு மற்றும் பலகார வகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடலூர் பகுதியில் திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சொரக்கல்பட்டு சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் தயாரிக்கப்பட்ட இனிப்புகள் ஆய்வகத்தில் சோதனை செய்ய எடுத்து செல்லப்பட்டது.

No comments:

Post a Comment