Oct 14, 2014

புகையிலை பொருட்கள் விற்ற 3 வியாபாரிகள் மீது வழக்கு



திருப்பூர், அக். 13:
தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பரவலாக விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
பி.என்.ரோடு, கொங்கு மெயின் ரோடு, 60 அடி ரோடு ஆகிய பகுதியில் உள்ள பெட்டிக்கடைகள் மற்றும் பேக்கரிகளில் சோதனை செய்ததில், 3 பேக்கரி கடைகளில், பான்மசாலா புகையிலைப் பொருட்களான ஹான்ஸ், சின்னி, கெய்னி, கூல்லிப், கணேஷ் புகையிலை, பதன்ஹெல்ப், சைனி உள்ளிட்டவற்றை தடையை மீறி விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
பான்மசாலா பொருட்களை விற்பனை செய்து வந்த 3 கடை உரிமையாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். மேலும், விற்பனைக்காக வைத்திருந்த 370 பான் மசாலா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

No comments:

Post a Comment