Jul 6, 2014

ஜவ்வரிசியில் கலப்படம் செய்வோருக்கு ரூ. 5 லட்சம் அபராதம்'

ஜவ்வரிசியில் கலப்படம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று, மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டி.அனுராதா கூறினார்.
சேலம் மாவட்டம், ஆத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற வட்டார ஸ்டார்ச், ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்துக்கு சங்கத் தலைவர் சதாசிவம் தலைமை வகித்தார். இதில், மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டி.அனுராதா கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். ஜவ்வரிசி உற்பத்தியில் கலப்படம் செய்யக்கூடாது.
மரவள்ளிக் கிழங்கு தோலை சுத்தமான நீரில் அரைவை செய்யவேண்டும். ரசாயனம், திராவகம் போன்றவைகளை பயன்படுத்தக்கூடாது. வரும் 10 -ஆம் தேதி முதல் ஆலைகளில் பிரஷர் மோட்டார்களை பயன்படுத்தக்கூடாது என்று அவர் உற்பத்தியாளர்களைக் கேட்டுக் கொண்டார். சேகோ ஆலை அதிபர்கள் தொழிலில் உள்ள பிரச்னைகளை எடுத்துக் கூறினர்.
இதைத் தொடர்ந்து டி.அனுராதா கூறியது:
ஜவ்வரிசி உற்பத்தி ஆலை உரிமையாளர்கள் உணவுப் பாதுகாப்பு முறைகேற்ப ஜவ்வரிசியைத் தயாரிக்க வேண்டும். மீறினால் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டும். அதையும் மீறினால் ஆலைக்கு "சீல்' வைக்கப்படும். கலப்படத்தைத் தடுக்க அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார் அவர். இந்தக் கூட்டத்தில் சங்கச் செயலர் டி.சி.எஸ்.வெங்கடேஷ், பொருளாளர் பிரபாகரன்,
ஆலை அதிபர்கள், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சுந்தர்ராஜன், கோவிந்தராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment