Jan 3, 2014

86 "அம்மா' உணவகத்திற்கு உரிமம்:உணவு பாதுகாப்பு துறை அளித்தது

சென்னை:முதற்கட்டமாக, சென்னையில் உள்ள, 86 அம்மா உணவகங்களுக்கு, உணவு பாதுகாப்புத்துறை உரிமம் கிடைத்துள்ளது. மற்ற உணவகங்களுக்கும் ஒரு வாரத்தில் உரிமம் வழங்கப்படுகிறது.சென்னை மாநகராட்சியில், வார்டுக்கு ஒன்று என, 200 இடங்களில், மலிவு விலை, 'அம்மா' உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னை அரசு பொது மருத்துவமனையில், பெரிய அளவில் இந்த உணவகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவகங்களுக்கு, உணவு பாதுகாப்புத்துறை உரிமம் கோரி, மாநகராட்சி விண்ணப்பித்தது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேரடி ஆய்வின் மூலம், முறையான உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. சென்னைக்குள், 105 உணவகங்களில், முதற்கட்டமாக, 86 உணவங்களுக்கு உரிமம் கிடைத்துள்ளது. "சென்னையில் உள்ள மற்ற உணவகங்கள், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் உள்ள, 96 உணவகங்களிலும் ஆய்வு முடிந்து, ஒரு வாரத்திற்குள் உரிமம் தரப்படும்' என, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோன்று, பிற மாநகராட்சிகளில் உள்ள, அம்மா உணவகங்களுக்கும், உணவு பாதுகாப்புத்துறை உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment