Jan 26, 2014

அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்த 7 பேர் மீது வழக்கு பதிவு

வி.கே.புரம்.ஜன25:
அம்பை வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருபவர் நாகசுப்பிரமணியம். இவர் நேற்று சிவந்திபுரம் மெயின் ரோட்டிலுள்ள பலசரக்கு கடையில் கடலைமாவு மற்றும் நல்லெண்ணெய் ஆகிய பொருட்களை சோதனை செய்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த 7பேர், நாகசுப்பிரமணியத்தை பணிசெய்ய விடாமல் தடுத்தனர். 
இது குறித்த அவர் வி.கே.புரம் போலீசில் புகார் செய்தார். சப்&இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

1 comment:

  1. சட்டத்தை மதியாதோர் மீது சட்டம் பாய வேண்டும்....

    ReplyDelete