Jan 24, 2014

தமிழகம் முழுவதும் உணவகங்கள், கடைகள் உரிமம் பெற பிப்.4ம் தேதி கடைசிநாள் மீறினால் 5 லட்சம் அபராதம் 6 மாதம் சிறை தண்டனை

சேலம், ஜன.23:
தமிழக முழுவதும் உணவு வர்த்தகத் தில் ஈடுபட்டுள்ள அனைத்து உணவகங்கள் மற்றும் கடைகள் பதிவு சான்றிதழ், உரிமம் பெறுவதற்கு பிப்.4ம் தேதியோடு காலக்கெடு முடிக்கிறது. உரிமம் பெறாத நிறுவனங்களுக்கு 5 லட்சம் அபராதம் மற்றும் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது. 
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர் ணய சட்டம் நாடு முழுவதும் 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி அமலுக்கு வந்தது. நுகர்வோருக்கு, கலப்படமற்ற, சுகாதாரமான உணவு வழங்குவது இச்சட்டத்தின் நோக்கம். உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், உணவு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள சிறு, பெரு வணிகர்கள் அந்தந்த மாவட்ட உணவுப் பாது காப்பு நியமன அலுவலரிடம் பதிவு செய்து, லைசென்ஸ் பெறுவது கட்டாயம். 
இந்நிலையில் இந்த சட்டத்தை எதிர்த்து கடந்தாண்டு வணிகர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் நீதிமன்றம் ஒரு ஆண்டுக்குள் உணவகங்கள் மற்றும் கடைகள் பதிவு சான்றிதழ் மற்றும் உரிமம் பெறவேண்டும் என்று உத்தரவிட்டது. இதன்படி, தமிழகம் முழுவதும் பல ஆயிரம் வணிகர்கள் பதிவு சான்றிதழ் மற்றும் உரிமம் பெற்று வருகின்றனர். இந்த உரிமம் பெற வரும் பிப்ரவரி 4ம் தேதி கடைசி நாளாகும். 
இது குறித்து சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு திட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா கூறியதாவது: 
உணவு தயாரிப்பு நிறுவனங்கள், பேக்கரிகள், சாலையோர தள்ளுவண்டி கடைகள், பால்காரர்கள், இறைச்சி விற்பனையாளர்கள், பள்ளி, கல்லூரி உணவு விடுதிகள், சமையல் காண்ட்ராக்டர்கள், திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள், மளிகை கடைகள், ஸ்டார்ச், ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட உணவுப்பொருள் தயாரிப்பு நிலையில் இருந்து பொதுமக்கள் உண்ணும் நிலை வரை உள்ள அனைத்து உணவு வணிகர்களும் உணவுப்பாதுகாப்பு அலுவலரிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். 
சேலம் மாவட்டத்தில் மொத்தம் 5 ஆயிரம் உணவகங்கள் உள்ளன. ஆண்டுக்கு 12 லட்சத்துக்கு மேல் வர்த்தகம் செய்வோர், மாவட்ட நியமன அலுவலரிடம் உரிமம் பெற வேண்டும். 12 லட்சத்துக்கும் குறைவாக வியாபாரம் உள்ள வணிகர்கள், தாங்கள் தொழில் நடத்துவது குறித்து பதிவு செய்தால் மட்டும் போதுமானது. இவர்கள், லைசென்ஸ் பெற தேவையில்லை. உணவு நிறுவனங்களை பதிவு செய்ய 100ம், உரிமம் பெற 2 ஆயிரமும் கட்டணம் செலுத்த வேண்டும். 
சேலம் மாவட்டத்தில் இதுவரை 3 ஆயிரம் வணிகர்கள் உரிமம் பெற்றுள்ளனர். உணவு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் வரும் பிப்ரவரி 4ம் தேதிக் குள் நியமன அலுவலர் அல்லது அந்தந்த வட்டாரத்தில் உள்ள பொறுப்பு அலுவலரிடம் பதிவு சான்றிதழ், உரிமம் பெற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. பதிவு சான்றிதழ் மற்றும் உரிமம் பெறாமல் உணவு வணிகத்தில் ஈடுபடுவோருக்கு 6 மாதம் சிறை தண்டனை மற்றும்5 
லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். 
இவ்வாறு அனுராதா கூறினார். 
உரிமம் எங்கே பெறுவது? 
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மாவட்ட நியமன அலுவலர் அலுவலகம், கலெக்டர் அலுவலகம் அருகே பழைய நாட்டாண்மை கட்டிட வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தை 0427&2450332, 94435&20332 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதை தவிர ஆத்தூர், இடைப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட நகராட்சியிலும், மேச்சேரி, நங்கவள்ளி, மகுடஞ்சாவடி, ஓமலூர் உள்பட 20 ஒன்றியங்களிலும் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெற அலுவலர்கள் உள்ளனர்.

No comments:

Post a Comment