Dec 4, 2013

வடசென்னை பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் - கடைக்காரர்களுக்கு நோட்டீஸ்


தண்டையார்பேட்டை, டிச. 4: 
வடசென்னை பகுதியில் மறைத்து வைத்து விற்பனை செய்த குட்கா பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. 
தமிழகத்தில் குட்கா பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், வடசென்னையின் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை மறைத்து வைத்து விற்பதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்து. 
சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் லட்சுமி நாராயணன் தலைமையில் அலுவலர்கள் கடந்த 2 நாட்களாக வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெரு, ஸ்ரீரங்கம்மாள் தெரு, காசிமேடு எஸ்என் செட்டி தெரு, தண்டையார்பேட்டை இளையமுதலி தெரு உள்பட பல பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். 
அப்போது, அங்குள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட ஹன்ஸ், பான்பராக், குட்கா ஆகியவை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரிந் தது. 
ழீ500 
மதிப்புள்ள குட்கா பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, விதிகளை மீறி குட்கா விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தொடர்ந்து குட்கா பொருட்களை விற்பனை செய்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்து சென்றனர். 

No comments:

Post a Comment