Dec 13, 2013

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

கோவை, டிச. 13: 
கோவை பீளமேடு போலீசார் அவினாசி சாலையில் ரோந்து சென்றனர். அங்குள்ள ஒரு கடையில் திடீர் சோதனை நடத்திய போது, அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பது தெரிந்தது. இதையடுத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்த பி.ஆர்.புரத்தை சேர்ந்த முருகன்(45) என்பவரை போலீசார் கைது செய்து, அங்கு விற்பனைக்கு இருந்த 300 பாக்கெட்டுகள் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். சிங்காநல்லூர் போலீசார், அப்பகுதியில் ரோந்து சென்றனர். இஎஸ்ஐ மருத்துவமனை அருகேயுள்ள ஒரு கடையில் போலீசார் திடீர் சோதனை நடத்திய போது, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பது தெரிந்தது. இதையடுத்து, புகையிலை பொருட்களை விற்பனை செய்த காமராஜபுரத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment