Nov 25, 2013

சுகாதாரமற்ற வாட்டர் பாக்கெட் விற்பனை


திருவாடானை, நவ. 25:
ஆர்.எஸ்.மங்கலத்தில் கடைகளில் விற்பனை செய்யப்படும் சுகாதாரமற்ற வாட்டர் பாக்கெட்டுகளை தடை செய்ய வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாடானை அடுத்துள்ளது ஆர்.எஸ்.மங்கலம் பேருராட்சி. இது திருச்சி ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் உள்ளது. அதனால், இங்கு வெளியூர் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனர். இங்கு பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அதிக கடைகள் உள்ளன.
நகரின் அனைத்து பகுதி கடைகளிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்று கூறி வாட்டர் பாட்டில்கள் மற்றும் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.
இவற்றின் மீது ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்ற நிறுவனம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதில் உள்ள தண்ணீரை குடிக்கும் போது உப்பு கலந்ததாக உள்ளது. சில பாக்கெட்டு தண்ணீரை குடிக்கும் போது பிளாஸ்டிக் வாடை வீசுகிறது. இப்படி தரமற்ற குடிநீர் விற்கப்படுவது குறித்து சிலர் சிலர் பேரூராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளனர். ஆனால் நடவடிக்கை இல்லை.
உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் இது போன்ற சுகாதாரமற்ற குடிநீர் பாக்கெட் விற்பனையை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment