Oct 19, 2013

ஐ.எஸ்.ஐ தரச்சான்று இல்லாத 3 தண்ணீர் கேன் நிறுவனங்களை பூட்டி ‘சீல்’ வைப்பு

வண்டலூர், அக்.19-காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே உள்ள மூலக்கழினி, மண்ணிவாக்கம் மற்றும் நெடுங்குன்றம் ஆகிய 3 இடங்களில் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி ஐ.எஸ்.ஐ. தரச்சான்று, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையின் உரிமம் இல்லாமல் தண்ணீர் கேன் நிறுவனங்கள் செயல்படுவதாக புகார்கள் வந்தன.இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று காலை அந்த 3 நிறுவனங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அந்த நிறுவனங்கள், ஐ.எஸ்.ஐ. தரச்சான்று மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையின் உரிமம் இன்றி செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அந்த 3 தண்ணீர் கேன் நிறுவனங்களையும் பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.“இதேபோல் ஐ.எஸ்.ஐ. தரச்சான்று இல்லாமல் செயல்படும் தண்ணீர் கேன் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

No comments:

Post a Comment