Aug 6, 2013

செஞ்சி திருமண மண்டபங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு

செஞ்சி,ஆக.6-செஞ்சி திருமண மண்டபங்களில் சுகாதாரமற்ற குடிநீரை பயன்படுத்தி உணவு தயாரிப்பதாகவும், சுகாதார மாக திருமண மண்டபங்களை வைத்திருப்பதில்லை என்றும் வந்த புகாரையடுத்து உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஆறுமுகம் அறிவுரையின்பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செஞ்சி கதிரவன், விக்கிர வாண்டி ரவிக்குமார் ஆகி யோர் செஞ்சியில் உள்ள திருமண மண்டபங்களில் சோதனை செய்தனர். அப் போது அவர்கள் பாதுகாக் கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யவும், தரமான முறையில் உணவு பொருள் தயாரிக்கவும் அறிவுறுத்தி நோட்டீஸ் வினியோகித்தனர். குறிப்பிட்ட கால அவகாசத்தில் திருமண மண்டபங்களின் வெளியே கொட்டப்படும் குப்பைகள் மற்றும் கழிவுப் பொருட்களை உடனடியாக அகற்றவும் மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தினர்.

No comments:

Post a Comment