Aug 23, 2013

குட்கா ஏற்றி சென்ற லாரி பறிமுதல்; டிரைவர் கைது

தர்மபுரி: தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்களை ஏற்றி சென்ற லாரியை, போலீஸார் பறிமுதல் செய்தனர்.
பெங்களூருவில் இருந்து, மகேந்திரமங்கலம் வழியாக தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் உள்ளிட்ட பொருட்கள், ஒரு லாரியில் கடத்தி செல்லப்படவுள்ளதாக எஸ்,பி., ஆஸ்ரா கார்கிற்கு ரகசிய தகவல் வந்தது.
அவரது உத்தரவுப்படி, தனிப்படை போலீஸார், நேற்று, மகேந்திரமங்கலம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த, ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையில், லாரியில் தடை செய்யப்பட்டுள்ள குட்கா, பான்பாரக் உள்ளிட்ட பொருட்கள் இருப்பது தெரிந்தது. தனிப்படை போலீஸார் லாரி டிரைவரிடம் விசாரித்தனர். விசாரணையில், தர்மபுரி மாவட்டம், தொப்பூரை சேர்ந்த, அன்புமணி, 35 என்பதும், பெங்களூரில் இருந்து விருதுநகருக்கு, ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட, குட்கா, பான்பராக் உள்ளிட்ட பொருட்களை எடுத்து சென்றது தெரிந்தது. போலீஸார் அன்புமணியை கைது செய்தனர். லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment