Jul 25, 2013

பதுக்கி வைத்திருந்தபான்பராக் பறிமுதல்

சேலம்: சேலம்- திருச்சி மெயின் ரோட்டில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த, பான்பராக், பாக்கெட்டுக்குள் பறிமுதல் செய்யப்பட்டது.தமிழகத்தில், பான்பராக், புகையிலை உள்ளிட்ட போதை வஸ்துகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட திருச்சி மெயின்ரோட்டில் உள்ள விநாயகா ஸ்டோர்ஸ், முகமது முகா ஆகிய மொத்த விற்பனை கடைகளில், உணவுப்பாதுகாப்பு அதிகாரி திருமூர்த்தி, சேலம் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், சரவணன், சங்கர், சேகர் ஆகியோர் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.இரண்டு கடைகளிலும், பான்பராக், ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்களும், பிளாஸ்டிக் கப்புகளும் விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டுப்பிடித்து, அவற்றை பறிமுதல் செய்தனர்.

No comments:

Post a Comment