Jun 13, 2013

பிராட்வே பேருந்து நிலையத்தில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா புகையிலை பொருட்கள் விற்பனையும் படுஜோர்

சென்னை,
பிராட்வே பேருந்து நிலையத்தை நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமித்து கடைகளை அமைத்துள்ளனர். இதனால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.
தடை விதிக்கப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனையும் பேருந்துநிலையத்தில் நடந்து வருகிறது.
புகையிலை பொருட்கள் விற்பனை
தமிழகத்தில் பான் மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்களை விற்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும் பான் மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை பிராட்வே பேருந்து நிலையத்தின் உள்ளேயும், வெளியேயும் நடந்து வருகிறது. பேருந்து நிலையத்தின் சாலைகளில் ஒரு சில பகுதிகள் குண்டும், குழியுமாக உள்ளது. இது பேருந்து ஓட்டுனர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது

No comments:

Post a Comment