Apr 29, 2013

Dinamalar

மசினகுடியில் காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல்

மசினகுடியில் காலாவதியான ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள உணவுப் பொருள்களை உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
   மசினகுடி பஜார் பகுதியில் உள்ள கடைகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் ரவி தலைமையில் அலுவலர்கள் சிவராஜ், செல்வராஜ், ஆதி கோபாலகிருஷ்ணன், அருண்குமார் ஆகியோர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
   இதில் 30 கிலோ கலப்பட தேயிலைத் தூள், ஹார்லிக்ஸ், பூஸ்ட், போர்ன்விட்டா, 20 கிலோ கோழி இறைச்சி, மீன் உள்ளிட்ட உணவுப் பொருள்களும் பால், தயிர், நெய் மற்றும் குளிர்பானங்கள் உள்ளிட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள காலாவதியான மற்றும் பாதுகாப்பற்ற உணவுப் பொருள்களை பறிமுதல் செய்த பின்னர்  அழித்தனர்.
  மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இதுபோன்ற சோதனை தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment