Apr 17, 2013

கார்பைடு கல் மூலம் பழம் பழுக்க வைத்தால் நடவடிக்கை: மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

சேலம்: ""கார்பைடு கல் மூலம் பழங்களை பழுக்க வைப்பது, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் படி தடை செய்யப்பட்டுள்ளது. புகை மூலம் பழங்களை பழுக்க வைக்க வேண்டும்,'' என, கலெக்டர் மகரபூஷணம் தெரிவித்தார்.
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், கலெக்டர் மகரபூஷணம் பேசியதாவது:
கார்பைடு கல் கொண்டு பழங்களை பழுக்க வைப்பது, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் படி தடை செய்யப்பட்டுள்ளது. கார்பைடு கல் நச்சுத்தன்மை உடையதால், நரம்பு மண்டலம் பாதிப்பு, புற்று நோய் உருவாகும். எத்திலின் அல்லது புகை கொண்டு பழங்களை பழுக்க வைக்கலாம். குளிர்பானம், சோடா, ஐஸ் கிரீம் தயாரிப்பாளர்கள் நீலம், பச்சை, மஞ்சள், சிவப்பு ஆகிய செயற்கை வண்ணங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சாக்கரீம் மற்றும் வண்ணம், 100 பிபிஎம் அளவுக்கு அதிகமாக இருக்க கூடாது. சிறு சிறு பாக்கெட்டில் கலர் பானங்கள் விற்பது தடை செய்யப்பட்டுள்ளது. அழுகிய பழங்களை கொண்டு எந்த பொருளும் தயாரிக்க கூடாது. தயாரிப்பு இடம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். பணியாளர்கள் கையுறை அணிந்து நோய் தாக்குதலுக்கு உள்ளாகமல் இருக்க வேண்டும். ஐ.எஸ்.ஐ., உரிமம் எண், பேட்ஜ் எண், காலவதி தேதி, தயாரிப்பாளர் முழு முகவரி ஆகியன தயாரிப்பு பொருளின் மீது கட்டாயம் ஒட்டப்பட்டு இருக்க வேண்டும். இந்த விபரம் இல்லாத தயாரிப்பு பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.
அனுமதியில்லாத ஹர்பல் மற்றும் பிளேவர்டு வாட்டர் விற்பனை செய்தால், பறிமுதல் செய்யப்படும். விதிமுறை மீறுபவர்கள் குறித்து, 0427-2450332 தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, மாவட்ட நியமன அலுவலருக்கு புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் வேளாண் இணை இக்குனர் சுந்தர், டவுன் பஞ்சாயத்து உதவி இயக்குனர் பழனியம்மாள், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் (பொறுப்பு) சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

"ரசாயனம் மூலம் பழங்களை பழுக்க வைத்தால் நடவடிக்கை'

ரசாயனம் மூலம் பழங்களை பழுக்க வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணம் எச்சரித்தார்.
கோடை காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் குடிநீர், பழ வகைகள், ஐஸ்கிரீம், குளிர் பானங்கள் உள்ளிட்டவை  பாதுகாப்பானதாகவும், சுகாதாரமானதாகவும் இருப்பதை உறுதி செய்யும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.
உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர்
க.மகரபூஷணம் தலைமை தாங்கினார். பல்வேறு துறை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆட்சியர் பேசியது:
சேலம் மாவட்டத்தில் உள்ள பழ மண்டிகளில் வணிகர்கள் கார்பைடு கல் கொண்டு பழங்களை பழுக்க வைக்கக் கூடாது. கார்பைடு கல் நச்சுத் தன்மை உடையது, ரசாயனம் மூலம் பழுக்க வைத்த பழங்களை சாப்பிட்டால், நரம்பு மண்டல பாதிப்பு, சிறுநீரகம், கல்லீரல், குடல் பாதிப்புகளும் ஏற்பட்டு இறுதியில் புற்றுநோய் உருவாக வாய்ப்புகள் உள்ளன.
மேலும், கார்பைடு கல் கொண்டு பழங்களை பழுக்க வைப்பது உணவு பாதுகாப்பு, தரங்கள் சட்டம் 2006-ன் படி தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, வணிகர்கள் இந்த முறையை கைவிட வேண்டும். இதற்கு மாற்றாக எத்திலின் மூலமும், புகை மூலமும் பழங்களை பழுக்க வைக்கலாம்.
ஐஸ் கிரீம் தயாரிப்பாளர்கள், சோடா, கலர் போன்ற குளிர்பானம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் உணவுப் பாதுகாப்பு சட்டப்படி, அனுமதிக்கப்பட்ட செயற்கை வண்ணங்களான நீலம், பச்சை, மஞ்சள், சிவப்பு ஆகிவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட நீரைக் கொண்டு சோடா, குளிர் பானங்கள் தயாரிக்க வேண்டும். துணிகளுக்கு போடும் சாயங்களை முற்றிலுமாக பயன்படுத்தக் கூடாது.
 குடிநீர் பாக்கெட்டுகள் தயாரிப்பவர்கள் ஆலைகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உணவு பாதுகாப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகளின்படி இருத்தல் கட்டாயம் ஆகும். தண்ணீர் நிரப்பிய கேனில் தயாரிக்கப்பட்ட தேதி, ஐஎஸ்ஐ உரிமம், பேட்ஜ் எண், காலாவதி தேதி, தயாரிப்பாளரின் முழு முகவரி அடங்கிய லேபிள் கட்டாயம்
ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.
விதிமுறைகளை மீறுபவர்கள் பற்றிய தகவலை மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தை 0427-2450332 என்ற தொலைபேசியை தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்றார் அவர்.
கூட்டத்தில் அரசுத் துறை அலுவலர்கள், குடிநீர், குளிர்பானங்கள் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment