Mar 11, 2013

கலரூட்டப்பட்ட கவுதிமாலா ஏலக்காய்


கம்பம்:ரசாயன முறையில் கலரூட்டப்பட்ட ஏலக்காய் கவுமதிமாலா நாட்டில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது .இதனால் உள்ளூர் ஏலக்காய்க்கு, விலை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இடுக்கி மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கர் பரப்பில் ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. சாகுபடி செய்யப்படும் ஏலக்காய்க்கு கட்டுபடியான விலை கிடைக்கவில்லை. ஒரு பொருள் தட்டுப்பாடாக இருக்கும் போது, அதன் விலை உயரும் என்ற பொருளாதார கோட்பாடு ஏலக்காய் விஷயத்தில் பொய்த்து போகிறது. விளைச்சல் குறைந்தும், விலை கிடைக்கவில்லை. சராசரியாக கிலோவிற்கு 650 ரூபாய் வரை கிடைக்கிறது. இந்நிலையில், கவுதிமாலா நாட்டில் இருந்து ஏலக்காய் இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த ஏலக்காய்க்கு மெஷினில் ரசாயன கலரூட்டப்பட்டுள்ளது. பச்சை கலரில் பளபளப்பாக உள்ளது. இதனால், உள்ளூர் ஏலக்காய்க்கு விலை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment