Oct 12, 2012

விருதுநகரில் கலப்பட "டீத்தூள்' : பதுக்கி வைத்தவர் வீட்டிற்கு "சீல்'

விருதுநகர் : விருதுநகர் எரிச்சநத்தத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட,1000 கிலோ கலப்பட டீத்தூளை கைப்பற்றிய, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் , வீட்டிற்கு "சீல்' வைத்தனர். மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி எம். கவிக்குமார் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன் மற்றும் அலுவலர்கள், விருதுநகரில் உள்ள கடைகளில் நேற்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு டீக்கடையில் , கலப்பட டீத்தூள் இருப்பது கண்டுபிடித்தனர். கடைகாரரிடம் விசாரித்தபோது, எரிச்சநத்தத்தை சேர்ந்த பாண்டியனிடம் "டீத்தூள்' வாங்கியது தெரிய வந்தது. இதை தொடர்ந்து,அவரது மொபைல் போனுக்கு தொடர்பு கொண்ட அதிகாரிகள், 300 கிலோ டீத்தூள் தேவைப்படுவதாக கூறி, விருதுநகருக்கு வரவழைத்தனர். அங்கு வந்த , அவரிடம் டீத்தூளை பறிமுதல் செய்து,அவரது வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அங்கு, போலி பெயர்களில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 1000 கிலோ போலி டீத்தூள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அதன்படி, டீத்தூள் வைத்திருந்த வீட்டின் அறையை "சீல்' வைத்தனர்.

No comments:

Post a Comment